யாழில் நேற்று அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இல்லை!

444

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் ஏறணும் வைத்தியசாலை பணிப்பாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்தில் 36 பேர் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE