இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். இவருடன் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்று தொடக்கம் மே 18 வரை நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படும் என ஏற்கனவே சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். இதற்கமைய இன்று முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற குழுவினர் அங்கு நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்தார்