புதுக்குடியிருப்பில் 19 கிராமசேவகர் பிரிவுக்குள் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு சேலை சாரம் வழங்கல் – வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்
புதுக்குடியிருப்பை சேர்ந்த 19 கிராம சேவகர் பிரிவில் விசேட தேவையுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீள்வாள்வோர் போன்ற சுமார் 500 குடும்பங்களுக்கு 18-05-2015 திங்கள் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் விசேட உதவித்திட்டத்தின் கீழ் சேலை மற்றும் சாரம் என்பவை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர், விவசாய அமைச்சர், மாகாண சபையின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்துகொண்டு மக்களுக்கு அன்பளிப்பை வளன்கிவைத்தனர்.