புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவிருந்த நிலையில் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த நபரை கைது செய்யக்கோரி புங்குடுதீவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவம் அறிந்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அங்கு சென்றனர். இந்த நிலையில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பொலிஸார் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற தகவலைத் தெரிவித்துள்ளனர் –