வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்பட்டது
உலக சுற்றாடல் தினம் யூன் 5 இன்று வவுனியா சந்தை உள்வட்ட வீதியில்
அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான இடத்தில் காலை 9.30 மணியளவில்
நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசியக் கொடியை வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் மோகநாதன்
சரஸ்வதி ஏற்றியதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு
ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன், தெற்கு பிரதேசசபை
செயலாளர் கிசோர் சுகந்தினி, வவுனியா வர்த்தக சங்க தலைவர்
ரீ.கே.ராஜலிங்கம், வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரி (எஸ்,ஜ) வல்க்கம்பாய
மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.