முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரானியின் மகன் சவீன் பண்டாரநாயக்க அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் கலாச்சாரம் வெகுவிரைவில் மாற்றமடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தம்மைப் போன்றவர்களுக்கு தற்போது அரசியலில் களமிறங்க சந்தர்ப்பம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.