மனைவியை கொடுமை படுத்திய கணவனுக்கு வளர்ப்பு நாய் கொடுத்த பதிலடி.

386

கண­வரால், மனைவி அடித்து துன்­பு­றுத்­தப்­பட்­டதைப் பார்த்து கொண்­டி­ருந்த வளர்ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவே­ச­மாகப் பாய்ந்து கடித்து குத­றிய சம்­பவம் ஒன்று கம்­ப­ளையில் இடம்பெற்றுள்­ளது.

வளர்ப்பு நாயின் கடிக்கு உள்­ளான நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்­பட்டார். குறித்த நபரின் உடலில் 35 இடங்­களில் நாய் கடித்­துக்­கு­த­றிய காயங்­க­ளுடன் கீறல் காயங்களும் உள்­ள­தாக வைத்­தி­ய­சாலைத் தக­வல்கள் தெரி­வித்­தன. காயங்­க­ளுக்கு 21 தையல்களும் இடப்­பட்­டுள்­ளன.

தினமும் மது­போ­தையில் வீட்­டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்­ளை­க­ளுடன் சண்­டை­யிடும் சந்தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் குறித்த வளர்ப்பு நாய் இடை நடுவே புகுந்து குரைப்­பதும் அந்த நபரை கடிப்­பது போல் பாசாங்கு காட்டி வந்­துள்­ளது.

இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை வழ­மைபோல் சண்டை நடந்த சமயம் குறித்த நாய் பல­மாக குரைத்தும் சண்­டையை நிறுத்தாதைய­டுத்து அந்­ந­பரின் மீது ஆவே­ச­மாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

An injured man is taken to a ward in the main hospital of Colombo on February 20, 2009 after he was wounded following a rebel Tamil Tiger attack. Tamil Tigers carried out a kamikaze-style attack in Sri Lanka's capital late tonight, smashing a light aircraft into the main tax building, killing two people and wounding 50, officials said. Sri Lanka's air force said anti aircraft guns shot down one of the light aircraft that had flown over the tightly-guarded capital while the remains of the second was found inside the Inland Revenue building, which caught fire. AFP PHOTO/Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

SHARE