மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரைட்க்கரை தோட்ட தொழிற்சாலைக்கருகில் அதி சக்திவாய்ந்த மின் மாற்றியும்
மின்கம்பங்களும் உள்ளது.அந்த மின் மாற்றி அருகே நாட்டப்பட்டுள்ள மின்கம்பங்கள் இரண்டும் என் நேரத்திலும்
சரிந்து விழ வாய்ப்புள்ளது.அதே போல் அதற்கு முன்னாள் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் மற்றுமொரு இரும்பு
துண்டை பொருத்தி மின்சார கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளது.அக்கம்பமும் சரிந்த நிலையிலேயே உள்ளது.அதிக காற்றும்
மழையும் பெய்தால் இக்கம்பம் சரிந்து விழ வாய்ப்புள்ளது.அவ்வாறு சரிந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட நேரிடும்
ஆகையால் மின்சார சபை முன்வந்து இக்கம்பங்களை முறையாக செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள்
கோரிக்கைவிடுக்கின்றனர்.
செய்தி . செ.தி.பெருமாள்