பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இதன்படி, பாடசாலைப் புத்தகங்களை 3 பாகங்களாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடையை 3இல் இரண்டாக குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும், அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.