மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் மர்ம கும்பல்

99

 

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கைத்துப்பாக்கிகள் கொண்ட விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு களமிறங்கவுள்ளது.

இந்த குழுவினர் விசேட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேற்பார்வையில் விசேட பயிற்சி பெறும் இந்தக் குழுவினர் விசேட தாக்குதல் மோட்டார் சைக்கிள் அணியாக வரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட பொலிஸ் குழு
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு உடனடி பதிலடி கொடுப்பதற்காக இந்தக் குழுக்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், குழுவிற்கு விசேட சீருடைகளும் வழங்கப்படும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளை இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE