பாறுக் ஷிஹான்
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (13 ) நடைபெற்றது.



இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் நெறிப்படுத்தலின் கீழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,அக்கரைப்பற்று பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் ரமீஸ் முஹைதீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ,சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.