இலங்கை அரசின் உள்ளக பொறியில் சர்வதேச சமூகம் உள்ளாகி விடுமா?

424

போர்க்குற்றம் விவகாரம் தொடர்பில் நீதியானதும் நடுநிலையானதுமான விசாரணைகள் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இலங்கையில் இல்லையென சர்வதேச ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் திருச்சோதி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் விடயங்களில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சர்வதேச சமூகம் தமது சொந்த நலன்களுக்காகவே செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அல்லது இலங்கை அரசின் உள்ளக பொறியில் சர்வதேச சமூகம் உள்ளாகி விடுமா? அல்லது இதனையும் மீறி தமிழர்களுக்கு தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

SHARE