யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் – சுகுனா

376

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராயவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப்புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும் அதன் பின்னரான புலிகளின் தலைமை குறித்தும் பார்க்க வேண்டியிருக்கின்றது. இரண்டாயிரத்து ஒன்பது, மே பதினெட்டாம் திகதி யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அரசாங்கம் அறிவித்தபோது, கே.பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனோ, புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்தாhர். அனால் அவ்வாறு அறிவித்த அவர் மறுநாளே அவர் இறந்துவிட்டதாகவும், புலிகள் இயக்கத்திற்கு தானே தலைமை ஏற்கப்போவதாகவும் அறிவித்தார்.

யார் இந்த கேபி?

VBK-19-KP_2282670f
கேபி என்று நன்கு அறியப்பட்ட குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் வெளிநாடு களில் இருந்துகொண்டு மிகத் தந்திரமாக வன்னிக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்த முக்கிய போராளி.ஒருகாலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்த கேபியை பிடிக்க சிறிலங்கா மாத்திரமல்ல, இந்தியாவும் தீவிரமாக முயன்று கொண்டிருந்தது. அனைவருக்கும் தண்ணீர் காட்டிக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவந்த கேபி, பிரபாகர னின் மிக நம்பிக்கைக்கு உரியவரா கவும், மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

புலிகளின் அனைத்து விவகாரங்களையும் இலங்கைக்கு வெளியே கையாண் டவர் இவரே. புலிகளின் பல ஆயிரம் கோடி சொத்துக்களையும் வர்த்தக நடவடிக்கைகளையும் இந்த கேபியே நிர்வகித்தும் வந்தார். ஆனால் புலிகளின் சர்வதேச அலுவலகங்களை நிர்வகிக்க வன்னியில் தலைமையால் நியமிக்கப்ட்ட கஸ்ரோ என்ற அவர், தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தனது உறவி னரான நெடியவனை நோர்வேக்கு அனுப்பி அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க, கேபியின் முக்கியத்துவம் திட்டமிட்டபடி குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் கேபி இயக்கத்தின் அனைத்து நடவடிக்கையிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டார். இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து புலிகளின் அனைத்து வர்த்தக நடவடிக்கைளும் கஸ்ரோவினதும் நெடியவனினதும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஆனால் யுத்தம் தீவிரமடைந்தபோது, புலிகளின் சொத்துக்களை தனிப்பட்ட வகையில் உரிமையாளர்களாக இருந்தவர்களிடமிருந்து பாதுகாக்க கேபியே சரியான ஆள் என்பதைப் புரிந்துகொண்ட பிரபாகரன், கேபியிடம் மீண்டும் பொறுப்புக்களை ஒப்படைத்தார். இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது இயக்கத்தையும் தலைமையையும் காப்பாற்றுவதற்காக கொழும்புடன் நேரடித்தொடர்பை ஏற்படுத்திய கேபி, கோத்தபாயவுடனும் பசில் ராஜபக்சவுடனும் தொடர்பை ஏற்படுத்தினார். அவருடைய நோக்கம் எல்லாம் தலைமையைக் காப்பாற்றுவதாகத்தான் இருந்தது. ஆனால், அது முடியாமல்போன பின்னர், முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்த பின்னர், இயக்கத்தின் தலைமைப்பதவியை கேபி தானே ஏற் றுக்கொள்ளவேண்டியதாயிற்று. ஆனால் தான் முன்னர் தலைமையைக் காப்பாற்றுவதற்காக தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கக்தை வைத்து தன்னை சிறிலங்கா உளவுத்துறை பின்தொடர்வதை கேபி எப்படி கவனிக்காமல் இருந்தார் என்பது இன்றுவரை தெரியவரவில்லை.
வன்னியில் புலிகள் முற்றாக மௌனமாக்கப்பட்ட பின்னர், சிறி லங்காவின் முழுக்கவனமும் கேபி மீது திரும்பியது. புலிகள் இயக்கத்தை வேரோடு பிடுங்கவேண்டுமெனில் கேபியையும் கைதுசெய்யவேண்டும் என்ற நிலை. அந்த முயற்சியிலும் சிறிலங்கா வெற்றி கொண்டது என்றே சொல்லலாம். கேபி மட்டும் கைதுசெய்யப்படாமல் இருந்திருந்தால், இன்றும் புலிகள் இயக்கம் கேபியின் தலைமையில் இன்னமும் உத்வேகத்துடன் வெளி நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும்.
கேபியை சிறிலங்கா கைது செய்யவில்லை என்றும் அவரே தானாக சரணடைந்தார் என்றும் இப்போதும் வாதிடும் சிலர் இருக்கிறார்கள். புலிகளின் பலகோடி சொத்துக்களை நிர்வகித்துக்கொண்டு, உலகத் தலை வராக வலம்வரக்கூடிய நிலையில் இருந்த கேபி தானாக சரணடைந்து ஒரு சிறைக் கைதிபோல வாழவேண்டிய தேவை அவருக்கு ஏன் ஏற்படவேண்டும்? இன்றும் கூட செஞ்சோலை சிறுவர் இல்லத்தை பராமரிக்கின்ற கேபி அந்த இல்லத்திலிருந்து சிறுநீர்கழிப்பதற்கு செல்கின்றபோதும் அவரைப் பின்தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை கண்காணிக்க செல்கின்ற அவலம் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதாக இருக்க முடியாது.
கேபி கைதுசெய்யப்பட்டு சிறிலங்கா கொண்டுவரப்பட, புலிகளின் அனைத்துச் சொத்துக்களையும் தொடர்ந்து நிர்வகிக்கின்ற பொறுப்பு நெடியவனைத் தொடர்ந்தது. நெடியவ னின் கட்டுப்பாட்டின்கீழ், புலிகளின் அனைத்து செயலகங்களும் இன்றுவரை இயங்கிவருகின்றன. அவை அனைத்துல செயலகம் என்ற பெயரிலும் சில நாடுக ளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரிலும் இவை இயங்கி வருகின்றன.

யார் இந்த விநாயகம்?

download
முள்ளிவாய்க்காலில் புலிகள் முழுமையாக மௌனிக்கவைக்கப்பட்ட பின்னர், உயிரோடு தப்பிய போராளிகள் பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கினர். பலர் செட்டிகுளம் முகா மில் இருந்து பணம்கொடுத்து வெளியேறி யதாகவும் அப்போது கூறப்பட்டதுண்டு. இவ்வாறு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த போரா ளிகள் அப்போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தார்கள். தாங்கள் போராட்டம் என்ற பெயரில் வன்னிக் காடுகளுக்குள் காலில் செருப்புக்கூட இல்லாமல் போராடிக்கொண்டிருக்க, அந்தப் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டு, புலம்பெயர் மண்ணில் ஒரு கூட்டம் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு போருக்குப் பின்னர் புலம்பெயர்ந்த போராளிகள் அங்கு இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முயல்வதாகவே கூறிக்கொண்டார்கள். அவ்வாறு புலம்பெயர்ந்த போராளிகளில், முக்கியமானவர் விநாயகம் ஏன்ற சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி. புலிகளின் புலனாய்வுத்துறையில் பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானின் உதவியா ளராக இருந்த இந்த விநாயகம், யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த அவர் புதிதாக புலம்பெயர்ந்த போராளிகளை ஒன்றிணைத்து அமைப்புக்கு புத்துயிர் ஊட்டப்பேவதாகக் கூறினார். அமைப்பின் சொத்துக்களை தனது பொறுப்பில் எடுக்க அவர் முயன்றபோது நெடியவன் தரப்பிற்கும் அவருக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் துப்பாக்கி மோதல்கள் கூட ஏற்பட்டன.

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தின வைபவங்கள் இரண்டு தரப்பாலும் தனித்தனியாக நடாத்தப்பட்டன. விநா யகம் தனது அணிக்கு தலைமைச் செயலக அணி என்று பெயரிட, நெடி யவன் தரப்பினர் அனைத்துலக செயல கம் என்ற பெயரிலும், விநாயகம் தரப்பினர் தலைமைச் செயலகம் என்ற பெயரிலும் இயங்கத் தொடங்கினர்.

புலம்பெயர் நாடுகளில் ஏற்கனவே இயங்கிவந்த அனைத்துலக செயலக செயற்பாடுகள் நெடியவன் தலை மையில் எதுவித இடையூறும் இன்றி தொடர்ந்துகொண்டிருக்க, மிகச்சொற்ப போராளிகளைக்கொண்டு விநாயகம் தனது தலைமைச்செயலக அணியை நடாத்திவருகிறார். இந்த இரண்டு அணியினருக்குமான மோதல்களை சாத்திரி என்ற முன்னாள் போராளி தனது கட்டுரை ஒன்றில் விலாவாரியாக விபரித்திருந்தார். இந்த விநாயகம் யார் என்பது பற்றிய சந்தேகங்களை அவர் தனது கட்டுரையில் எழுப்பியிருந்தார்.

யார் இந்த அனந்தி எழிலன்?

Ananthy-Sasitharan-lead
புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் எழிலன் என்ற சசிதரன். யுத்தம் முடிந்த பின்னர் எழிலன் இலங்கை இராணுவத்துடன் பணியாற்றுவதாக பரவலாக கதைப்பதுண்டு. விமான நிலையத்தில் இலங்கைப் படை யினருடன் இருந்துகொண்டு தப்பிச் செல்லும் புலிகளை காட்டிக்கொடுக்கும் பணியை எழிலன் செய்து வருவதாகவும் அப்போது கூறப்பட்டது. அதே எழில னின் மனைவியான அனந்தி, கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை அவர் யாராலும் அறியப்படாதவராகவே இருந்தார்.

இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, புலிகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் உண்டு. பலவந்தமாக ஆட்களை கடைசிக்கட்டத்திலும் இணைத்தார்கள். அவ்வாறு பலவந்தமாக இணைக்கப்ட்டவர்கள்தான் பின்னர் சரணடைந்த பன்னிரண்டாயிரம் போராளிகளில் கணிசமானவர்கள்.அவ்வாறு பலவந்தமாக ஆட்களைச் சேர்த்தவர்களில் எழிலன் முக்கியமானவர் என்று கூறப்படுகின்றது. அத்தகைய ஒரு போராளியின் மனைவியான அனந்தி திடீரென்று தேர்தல் களத்தில் இறக்கப்பட்டார்.

அந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இந்த அனந்தி யார் என்பதே மக்களுக்கு, அதுதான் வாக்காளர்களுக்கு தெரியாமலே போயிருக்கும். தேர்தல் நெருங்கிவந்த நேரத்தில் அனந்தியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர், அனந்தியை பிரபல்யமாக்கினர். அவர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார்.கிராமங்கள் எங்கும் அனந்தியின் பெயர் உச்சரிக்கப்பட அனந்தி எண்பதாயிரம் வாக்குகளை அள்ளிக்குவித்தார். அனந்திக்கு இத்தனை பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்தவர்கள் வேறு யாருமல்ல, இராணுவத்தினரேதான். தாம் இவ்வாறு அனந்தி மீது தாக்குதல் நடாத்தினால் அது அவருக்கு சாதகமாகவே போகும் என்பது இராணுவத்தினருக்குத் தெரியாததல்ல. எந்தக் குழந்தையாலும் புரிந்துகொள்ளக்கூடிய அந்த விடயத்தை இராணுவத்தினர் புரிந்துகொள்ளவில்லை என்று யாராவது வாதிட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.
அனந்தி வெற்றி பெற்று மாகாண சபைக்கு உறுப்பினரானதும் தனக்கு அமைச்சர் பதவி தரப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம்கொண்ட தமிழரசுக்கட்சித் தலைமை அவரை தூர வைக்கவே விரும்பியது. ஆனால் அனந்தி, கட்சியின் எந்தக்கட்டுப்பாட்டையும் கருத்தில் கொள்ளவில்லை. தன்னிச்சையாக ஜெனீவா போனார். தன்னிச்சையாக அறிக்கைகளை விடுத்தார். அவரின் ஒவ்வொரு நகர்வுகளையும் புலம்பெயர் மண்ணில் இருந்த சிலர் ஆதரவளித்தனர். அவ்வாறு ஆதரவளித்தவர்கள் வேறு யாருமல்ல. தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் விநாயகம் குழுவினரே என்பது பின்னரே தெரியவந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தலைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று பகிரங்கமாகவே அனந்தி கோரிக்கையை முன்வைத்தார். தான் சார்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த பின்னர், அதற்கு எதிராக முடிவெடுத்ததுடன், தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு பரப்புரை செய்தார். தேர்தல் பகிஷ்கரிப்பால் மகிந்த ராஜபக்ச தான் பயன்பெறுவார் என்பதை சின்னக்குழந்தை கூட அறிந்திருந்தபோது அனந்தி அறியாமல் இருந்திருக்க முடியாது. அவரது விருப்பம் அதுவாக இருந்ததோ தெரியவில்லை.

யார் இந்த சிவாஜிலிங்கம்?

sivajilingam_tna_mp-seithhy
அனந்தி எழிலனின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் அவருக்கு துணையாக இருப்பவர் இந்த சிவாஜிலிங்கம். தன்னை மிக தீவிர தேசியப் பற்றாளராகவும், புலி ஆதரவாளராகவும் காட்டிக்கொள்ள விரும்புபவர். யுத்தம் முடிவடைந்த பின்னர் சுகவீனமடைந்த பிரபா கரனின் பெற்றோரின் நலன்களைக் கவனித்த சிவாஜிலிங்கம், அதற்காக அரசாங்கத்துடன், குறிப்பாக அப்போதைய பாதுகாப்பு செயலா ளருடன் நெருக்கமாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்த நேரத்திலும் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்புகொள்ளக்கூடிய அளவிற்கு அவரின் நட்பு வட்டாரத்திலிருந்தவர் இந்த சிவாஜிலிங்கம். புலிகளுக்கு ஆதவாக அல்லது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடிய துணிச்சலுள்ளவர். இப்படித்தான் தமிழ்மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.

அப்போது அதற்கு எதிராக களத்தில் குதித்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கினார். அதனால் பயனடைந்தது வேறு யாருமல்ல, மகிந்த ராஜபக்ச மட்டும்தான்.
தொடரும்…

 

SHARE